LPG சிலிண்டர் மானியம் வரவில்லையா? சரிசெய்வதற்கான வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் அரசு தரப்பில் இருந்து சமையல் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தொகை அனைவர்க்கும் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்னும் சிலருக்கு கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்து வருகின்றனர்.
சமையல் எரிவாயு:
இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமையல் சிலிண்டர் இணைப்பை பெற்றுள்ளனர். தற்போது இந்த சமையல் சிலிண்டர்களின் விலை அதிகரிப்பதால் இல்லத்தரசிகள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு சிலிண்டர்கள் விலையை நிர்ணயிக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து விலை ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது. கொரோனாவால் வேலையிழந்த மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மீண்டும் கணினி அறிவியல் பாடம் கட்டாயமாக்கப்படுமா?ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை!
சிலிண்டர் விலையில் குறிப்பிட்ட தொகையை மானியமாக அரசு வழங்கி வருகிறது. இந்த தொகையானது சிலிண்டர் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கபடுகிறது. மேலும் மத்திய அரசு தரும் சிலிண்டருக்கான மானியத் தொகையும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்தது. இந்த மானியத்தொகை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. மத்திய அரசு நிரந்தரமாகவே மானியத்தை நிறுத்த போவதாகவும் தகவல் வெளியானது. அதனால் மீண்டும் சிலிண்டர் மானியத்தொகை வரவு வைக்கும் படி கோரிக்கைகள் எழுந்தது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (டிச.24ம் தேதி) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இதனையடுத்து கடந்த மாதம் மீண்டும் மானியத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் சிலருக்கு மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். சிலிண்டர் மானியத்தொகை வராதவர்களுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இந்த நிலையில் சிலிண்டர் மானியம் குறித்து அறிய http://www.mylpg.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.