SBI வங்கியில் நகைக்கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!
SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு தங்க நகைகள் மூலம் கடன் பெறுவதற்கான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நகைக்கடன் பெற YONO செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு நகைக்கடன்:
உலகின் முன்னணி பொதுத்துறை வங்கியான SBI தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான தொகையை தங்கநகை அடமானத்தின் பேரில் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை பெற SBI வங்கியின் மொபைல் செயலியான YONO SBI மூலம் விண்ணப்பிக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் SBI தனது வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாகவும், எளிமையான முறையில் அனைத்து சேவைகளையும் பெறும் விதமாகவும் அனைத்து வசதிகளையும் ஆன்லைன் முறையில் வழங்கி வருகிறது.
தமிழகத்தில் டிச.28 ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதன்படி விவசாயிகள் YONO செயலி மூலம் இந்த நகைக்கடனை பெற முடியும். இந்த நகைக்கடன் தங்க கட்டிகள் மீது வழங்கப்பட மாட்டாது. மேலும் 50 கிராம் வரை தங்க நாணயங்கள் அல்லது ஆபரணங்கள் மீதும் குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. நகைக்கடன் பெற விரும்பும் விவசாயிகள் இது குறித்த கூடுதல் விபரங்களை வங்கிக்கு நேரில் சென்றோ அல்லது அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்றோ தெரிந்து கொள்ளலாம். இந்த நகைக்கடன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
நகைக்கடன் மூலம் விவசாயிகள் பெறும் நன்மைகள்:
1. 7% வரை குறைவான வட்டியில் கடன் பெறலாம்.
2. சொந்த நிலத்தில் அல்லது குத்தகை நிலத்தில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் RBI/GoI/NABARD வழிகாட்டுதல்களின்படி விவசாயத்தின் கீழ் வகைப்படுத்த அனுமதிக்கப்படும் மற்ற அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்கும் இந்த கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.