SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – டெபிட் கார்டை பிளாக் செய்யும் முறைகள் இதோ!
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் கார்டுகளை போன் கால் மூலமாகவும், எஸ்எம்எஸ் மூலமாக பிளாக் செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறு பிளாக் செய்யலாம் என்பது குறித்த வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
டெபிட் கார்டு:
இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை பாதுகாக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் 10,000க்கு மேலான பண பரிமாற்றத்தின் போது ஒடிபி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது 10,000 கீழ் எளிதாக பணம் எடுக்கலாம். அதற்கு மேற்பட்ட பண பரிவர்தனைகளுக்கு ஒடிபி எண் அவசியம். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி எண் வரும் அவற்றை பதிவிட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும்.
தமிழக PM KISAN திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ஏப்ரல் 28 முதல் மே 1ம் தேதி வரை சிறப்பு முகாம் ஏற்பாடு!
தற்போது அனைத்தும் வேலைகளும் டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில் பணம் எடுக்க வங்கி செல்ல தேவையில்லை. ஏடிஎம்களில் எளிதாக பணம் எடுக்கலாம். அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படுவதால் ஏடிஎம் கார்டை நாம் எப்போதும் கைகளில் வைத்திருப்பது அவசியமாகும். இத்தகைய ஏடிஎம் கார்டு தொலைந்து போனால் அதனை வைத்து மோசடி கும்பல் பண மோசடி செய்ய வாய்ப்புள்ளது. அதனால் உடனடியாக அதனை பிளாக் செய்ய வேண்டும். தற்போது போன் கால் மூலமாகவும், எஸ்எம்எஸ் மூலமாக பிளாக் செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
முதலில் 1800 1234 அல்லது 1800 2100 என்ற இலவச ஐவிஆர் சேவை எண்ணுக்கு டயல் செய்து அதில் எண் 2 அழுத்தி அக்கவுண்ட் நம்பரில் உள்ள கடைசி 5 இலக்க எண்களை உள்ளீட்டு டெபிட் கார்டை பிளாக் செய்யலாம். அடுத்ததாக Https://Www.Sbicard.Com/ என்ற இணையதளம் வாயிலாக ரெக்வெஸ்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்து கார்டை பிளாக் செய்யலாம்.