தமிழக அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – மதிப்பெண் அடிப்படையில் நடத்த திட்டம்!
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றுவரும் அரசு மாதிரி பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்க இருக்கிறது. மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு மாதிரி பள்ளி:
தமிழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் அனைத்து மாவட்டங்களிலுமே அரசு மாதிரி பள்ளிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல் கூடுதலாக 25 மாதிரி பள்ளிகளையும் 150 கோடி ரூபாய் செலவில் துவங்க அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது. இந்த அரசு மாதிரி பள்ளிகளில் இந்த கல்வியாண்டு முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
மேலும், அந்த மாணவர்களுக்கு உணவு, இருப்பிடம் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற ஊரக திறனாய்வு தேர்வில் எடுத்த மதிப்பெண்ணின் அடிப்படையில் 10 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு 10 ஆம் வகுப்பு NTSEதேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
Exams Daily Mobile App Download
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி மற்றும் கூடுதல் பயிற்சியளித்து தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் மற்றும் தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் நுழைய வழிவகுப்பதே இதன் திட்டமாகும். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இந்த பள்ளிகளில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.