தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இனி அரிசி கிடைப்பது சிக்கல்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இனி அரிசி கிடைப்பது சிக்கல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - இனி அரிசி கிடைப்பது சிக்கல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இனி அரிசி கிடைப்பது சிக்கல்!

தமிழகத்தில் பொறுப்பேற்ற திமுக அரசு ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும் என தேர்தல் அறிக்கை அளித்து இருந்தது. ஆனால் தற்போது ஒரு கோடி ரேஷன் அரிசி மூட்டைகள் புழு, பூச்சிகள் பிடித்து பாழடைந்து உள்ளது. இதனால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஒரு கோடி அரிசி மூட்டைகள் பாழ்:

தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பல லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் இலவச அரிசியை நம்பி ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் ரேஷன் அரிசி தற்போது தரமற்ற முறையில் விநியோகிப்பதாக பல மாவட்டங்களில் இருந்து புகார்கள் வந்து கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 800, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 645 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Reliance Jio பயனர்களுக்கு சூப்பரான அறிவிப்பு – இனி டேட்டா ஓவர் தொல்லை இல்லை!

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு, வேடப்பாளையம், திம்மாவரம் உள்ளிட்ட கிடங்குகளில் மட்டும் சுமார் 10000 மெட்ரிக் டன் அரிசி மூட்டைகளில் உள்ள அரிசிகள் கலர் மாறி புழு மற்றும் வண்டுகள் மொய்த்து காணப்பட்டு உள்ளது. இந்த தரமற்ற அரசி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 1445 ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அரிசி தரம் சோதிக்கும் ஆய்வாளர்களும் அதை கண்டுகொள்ளவில்லை. இதுவரை சுமார் 1 கோடி அரிசி மூட்டைகள் பாழாகி உள்ளது தெரியவந்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் கிடங்குகளில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், முளைத்த நிலையிலும் உள்ளதால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை கிடங்குக்கு திருப்பி எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1 கோடி அரிசி மூட்டைகள் தரமற்ற அரிசிகளாக உள்ளதால், தமிழகத்தில் ரேஷன் அரிசியை மட்டும் நம்பி வாழும் மக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!