தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 10 நாட்கள் விடுமுறை? நிவாரணம் வழங்குவதில் சிக்கல்!!

0
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 10 நாட்கள் விடுமுறை? நிவாரணம் வழங்குவதில் சிக்கல்!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 10 நாட்கள் விடுமுறை? நிவாரணம் வழங்குவதில் சிக்கல்!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 10 நாட்கள் விடுமுறை? நிவாரணம் வழங்குவதில் சிக்கல்!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்திலும் அரசு வழங்கும் சலுகைகளை ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து விநியோகம் செய்து வருவதால், அவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள்:

தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கானது அமலில் இருக்கும் போது, ரேஷன் கடைகள் மட்டும் தொடர்ந்து செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பொது முடக்க காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வகையில், அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதியான 4 ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதனால் ரேஷன் கடை ஊழியர்கள் கொரோனா காலத்திலும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இது தவிர தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள 14 வகையான மளிகை பொருட்களும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட உள்ளன. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் ஓய்வின்றி வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் அரசுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர்.

ஜூன் 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – காலை 10 மணிவரை கடைகளை திறக்க அனுமதி!

அதாவது, தமிழகத்தில் ரேஷன் கடைகள் கொரோனா வைரஸ் காலத்திலும் தொடர்ந்து இயங்கி வருகிறது. போதுமான பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் கொரோனா பரவும் சூழலும் எளிதாக அமைந்து விடுகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களை, முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். மேலும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 10 நாட்கள் வரை அனைத்து ரேஷன் கடைகளுக்கும், ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

உத்திர பிரதேசத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து – கொரோனா பரவல் எதிரொலி!!

இந்த நிலையில் தமிழக முதல்வர் அறிவித்தபடி, இன்று (ஜூன் 3) முதல் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் பணம் மற்றும் சிறப்பு மளிகை தொகுப்பு வழங்கும் திட்டம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் அளித்துள்ள கோரிக்கையின் படி, ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டால், பொதுமக்களுக்கு சேர வேண்டிய நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!