CBSE 10 & 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சிக்கல் – புதிய அறிவிப்பு!
சமீபத்தில் வெளியான CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் கணக்கீடு தொடர்பாக ஏதேனும் நிலை மாற்றம் இருந்தால் அல்லது தேர்வு முடிவுகளில் திருப்தி அடையவில்லை என்றால் அம்மாணவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை கடந்த மாதத்தில் அறிவித்தது. இந்த மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்கள் சிறப்பு தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், CBSE 10, 12 வது வாரிய தேர்வு முடிவுகளை கணக்கிடுவதில் ஏதேனும் சர்ச்சை இருந்தாலோ அல்லது தேர்வு முடிவுகளில் திருப்தி அடையாத மாணவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களின் சிக்கல்களுக்கு தீர்வு காண CBSE வாரியம் ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அரசுக்கு கோரிக்கை!
அந்த வகையில் மாணவர்கள் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைவதன் மூலம் இந்த பிரச்சனை குறித்த விவரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சில சிக்கல்களுக்கு மட்டுமே இவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி CBSE வாரியத்தின் தேர்வுக்குழு, மாணவர்களுக்கான இறுதி முடிவுகளை தயார் செய்து கணக்கீட்டிற்காக CBSE இணையதளத்தில் பதிவேற்றியது.
இந்த மதிப்பெண்களில் திருப்தி அடையவில்லை என்றால், பள்ளியின் முதல்வரை அணுகி இவற்றில் சரிபார்ப்பு செய்யலாம். அடுத்ததாக தவறான கணக்கீடு அல்லது முடிவுகளைப் பதிவேற்றுவது தொடர்பான சர்ச்சைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்திற்கு அந்தந்த பள்ளி பதிவுகளுடன் விவரக் கோரிக்கையை அனுப்ப வேண்டும். அதற்கான இணைப்பு ஸ்கூல் லாக்-இன்-ல் கிடைக்கும். அத்தகைய உரிமைகோரல்களை சமர்ப்பிக்கும் போது, பள்ளி பொருத்தமான வகுப்பையும் TYPE-3 (தவறான கணக்கீடு/ முடிவை பதிவேற்றுவதையும்) என்ற இணைப்பையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
கொள்கை தொடர்பான சர்ச்சைகளை பொருத்தளவு, இவை உச்ச நீதிமன்றத்தால் ஜூன் 17, 2021 தேதியிட்ட ஒப்புதலுக்கு உட்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அட்டவணை கொள்கைக்கு இணங்க தேர்வு முடிவுகள் வாரிய குழுக்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. அதனால் கொள்கையில் ஏதேனும் சர்ச்சை இருந்தால், அவை இந்தப் பிரிவின் கீழ் வரும். இந்த சர்ச்சையை சரிசெய்ய SRSR அமைப்பு மூலம் பள்ளியின் விண்ணப்பம் மட்டுமே வாரியத்திற்கு அனுப்பப்படும்.
அத்தகைய உரிமைகோரல்களை சமர்ப்பிக்கும் போது, பள்ளி பொருத்தமான வகுப்பையும் TYPE-4 (கொள்கை தொடர்பான சர்ச்சைகள்) என்ற இணைப்பையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வகை சிக்கல்களுக்கு தேர்வு காண வேண்டியவர்கள் இன்று (ஆகஸ்ட் 9) முதல் ஆகஸ்ட் 11 வரையும் பிரதிநிதித்துவத்தை அனுப்பலாம். மேலும் இந்த சிக்கல்களை தேர்வு முடிவுக்குழு ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 13 வரை செயலாக்கத் தொடங்கும். இது தொடர்பான மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள cbse.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.