நடிகை நட்சத்திரா குடும்பத்தில் மீண்டும் பிரச்சனையா? தோழி ஸ்ரீநிதி உடைத்த ரகசியம்!
நக்ஷத்ராவை அவரது கணவர் குடும்பத்தினர்கள் மிகவும் கொடுமைபடுத்துவதாகவும், காப்பாற்றவில்லை எனில் சித்ராவை போல தற்கொலை செய்து கொள்வார் எனவும் ஸ்ரீ நிதி கூறியதால் நட்சத்திரா வருத்தப்படும் படியான ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நக்ஷத்ராவின் பதிவு:
கடந்த சில மாதங்களாகவே ஸ்ரீநிதி பல சர்ச்சைகளை சமூக வலைப்பக்கங்களில் கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஸ்ரீ நிதியின் நெருங்கிய தோழியான நக்ஷத்ராவை அவரது கணவர் குடும்பத்தினருடன் மிகவும் கொடுமைப்படுத்தி அடைத்து வைத்திருப்பதாக ஒரு வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். உடனடியாக நக்ஷத்ராவை காப்பாற்றியே தீர வேண்டும். இல்லையெனில், சித்ராவை போல் நக்ஷத்ராவும் தற்கொலை செய்து கொள்ளத்தான் நேரிடும் என ஒரு அதிர்ச்சி கலந்த வீடியோவினை பதிவிட்டிருந்தார்.
Exams Daily Mobile App Download
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவருமே பயந்து நக்ஷத்ராவிற்கு கால் செய்து பேசி இருக்கின்றனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலின் தயாரிப்பாளரான நிவாஸினி திவ்யா தற்போது நக்ஷத்ராவை தொடர்பு கொண்டு இந்த வீடியோ பற்றி பேசியுள்ளார். அதாவது, ஜீ தொலைக்காட்சியில் சில சீரியல்களின் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை செய்துவரும் விஷ்வாவைத் தான் நக்ஷத்ரா காதலித்துக் கொண்டு இருக்கிறார். நக்ஷத்ராவிடம் இந்த வீடியோ பற்றி பேசியபோது சித்ராவை போல நானும் தற்கொலை செய்து கொள்வேன் என ஸ்ரீநிதி எதற்காக கூறினார் என்று தற்போது வரைக்கும் தெரியவே இல்லை.
திருமணம் செய்து கொண்ட ‘பிக் பாஸ்’ பிரபலம் ஷெரின் – வைரலாகும் பதிவு! ஷாக்கான ரசிகர்கள்!
ஸ்ரீநிதி என்னைப் பற்றியும் எனது கணவரின் குடும்பத்தை பற்றியும் பேசியதை தற்போது வரைக்கும் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எதற்காக ஸ்ரீ நிதி இது போன்ற சர்ச்சைகளை கிளப்பி கொண்டிருக்கிறார் என்பது தெரியாமல் அனைவருமே புலம்பிக் கொண்டிருக்கிறோம் என நக்ஷத்ரா கூறியுள்ளார். மேலும், ஸ்ரீநிதி சிம்புவை காதலிப்பதாகவும், சிம்புவின் வீட்டிற்கு முன்பு குங்குமத்துடன் சென்று இப்பொழுதே சிம்பு என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் சர்ச்சையை கிளப்பினார். இதுபற்றி ஸ்ரீ நிதியிடம் தற்போது கேட்டபோது அதெல்லாம் சும்மா ஒரு பப்ளிசிட்டிக்காக செய்தேன் என அசால்ட்டாக கூறிவருகிறார். இதனால் ரசிகர்கள் பலரும் ஸ்ரீ நிதியின் மீது கொலை வெறியில் இருக்கின்றனர்.