புரோ கபடி லீக் 12 அணிகளுடன் இன்று தொடக்கம் – தெலுங்கு டைட்டன்ஸ் vs தமிழ் தலைவாஸ் மோதல்!
2021 ஆம் ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டி இன்று தொடங்குகிறது. 12 அணிகள் மோதும் இந்த லீக் தொடர் பெங்களூரில் நடைபெறுகிறது. விறுவிறுப்பான போட்டிகள் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
புரோ கபடி லீக் போட்டி:
இந்தியாவில் கபடி ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்களை திருப்திபடுத்தும் வகையில் புரோ கபடி லீக் போட்டி 2014 ஆண்டு தொடங்கி இன்று முதல் இந்தியாவில் நடந்து கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் இப்போட்டி நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டி இன்று தொடங்க உள்ளதால் இப்போட்டிக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கபடி ரசிகர்கள் போட்டிகளை காண ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் TET தேர்வு எழுத காத்திருப்போர் கவனத்திற்கு – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
புரோ கபடி லீக் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் , தபாங் டெல்லி, புனேரி பால்டன், தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி.யோத்தா, மற்றும் மும்பை மொத்தமாக 12 அணிகள் களம் இறங்க உள்ளன. கடந்த ஆண்டு புரோ கபடி லீக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி பெற்றனர். இந்த முறை அனைத்து அணிகளும் பலத்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிற நிலையில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதியோர்கள் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பு!
8வது சீஸனான புரோ கபடி லீக் போட்டி இன்று பெங்களூரில் ஷெராட்டன் கிராண்ட் ஒயிட் பீல்டு ஓட்டல் வளாகத்தில் நடைபெற உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ்-தமிழ் தலைவாஸ் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கும் இதை தொடர்ந்து பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோத்தா மோதும் முதல் போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கவுள்ளது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவலால் கபடி போட்டிகளை ரசிகர்கள் நேரில் சென்று கண்டுகளிக்க அனுமதி இல்லை என புரோ கபடி லீக் நிர்வாகம் அறிவித்துள்ளது.