விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய ப்ரியங்கா? சூப்பர் சிங்கரில் என்ட்ரி! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் பதினோராவது வாரம் தொடங்கிய நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு பிரியங்கா வெளியேற இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் எலிமினேஷன்:
தமிழ் சின்னத்திரையில் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தொடங்கப்பட்டு தற்போது 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது 11 போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றனர். இந்த வாரம் முதல் இறுதி சுற்றிற்கு தகுதி பெறும் போட்டியாளர்களை தேர்வு செய்ய பல கடினமான டாஸ்குகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மக்களின் ஆதரவை பெற்ற பிரியங்கா தற்போது பல எதிர்ப்புகளை சந்தித்து இருக்கிறார்.
சந்தியாவை காப்பாற்றும் சரவணன், போட்டியில் கலந்து கொள்ள சொல்லும் சிவகாமி – “ராஜா ராணி 2” எபிசோட்!
அதற்கு காரணம் அபிஷேக் அபிஷேக் இருந்த வரை பிரியங்கா அவர் பேச்சை கேட்டு நடந்ததால் தான் மக்களிடம் அதிகம் நெகட்டிவ் கமெண்ட்டுகளை பெற்றார். இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்ய இருப்பதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். மேலும் டாஸ்குகள் வழங்கப்பட்டு போட்டியாளர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். அதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு பிரியங்கா வெளியேற்றப்பட அதிகம் வாய்ப்புள்ளது.
கண்ணம்மாவுடன் மகிழ்ச்சியாக வாழ தொடங்கிய பாரதி, மீண்டும் இணைந்த ஜோடி – ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏழு சீசன்களாக பிரியங்கா தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் தற்போது பிரியங்கா இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக ஷிவாங்கி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதனால் இந்த வாரம் பிரியங்கா வெளியேற்றப்பட்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நிகழ்ச்சியில் என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.