சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்காக கண்ணீர் விட்ட பிரியங்கா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவியில் உள்ள பிரபலங்கள் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் மிகவும் நட்புடன் தான் பழகி வருவர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அஜய் கிருஷ்ணாவிற்காக பிரியங்கா கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஆங்கர் பிரியங்கா:
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் அத்தனையும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவையாகும். இவை ரசிகர்கள் மத்தியில் புகழ், அதிக வெற்றியை அடைவதற்கும் முக்கிய காரணமாக இருப்பவர்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள். டிடி முதல் ப்ரியங்கா வரை ரசிகர்கள் மனதில் நீங்காத தனி இடத்தை பிடித்திருப்பவர்கள் பலர் உள்ளனர். அதிலும் கடந்த சில வருடங்களாக விஜய் டிவியின் அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருபவர் ப்ரியங்கா தான்.
Exams Daily Mobile App Download
பிரியங்காவின் அன்பான செய்கையும், விளையாட்டு தனமான பேச்சும் அவரை விஜய் டிவியின் பேவரிட் தொகுப்பாளினியாகவே மாற்றியுள்ளது. கடந்த பிக் பாஸ் சீசனிற்கு பிறகு பிரியங்காவின் உண்மையான குணத்தை அறிந்து கொண்ட பின்னர் ரசிகர்கள் இவருக்கு அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா தன்னுடன் பணியாற்றும் மற்றவர்களுடன் மிகவும் நட்புடன் பழகி வருவார். இதனால் அவரை சுற்றி எப்போதும் ஒரு நண்பர் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் வரும் அடுத்த இரண்டு ட்விஸ்ட்கள் – ரசிகர்கள் உற்சாகம்!
தற்போது சூப்பர் சிங்கர் பிரபலம், அஜய் கிருஷ்ணாவிற்கு அவரது காதலி ஜெசியுடன் திருமணம் நடந்தது. இது குறித்த தகவல்களை வெளியிடும் போது அஜய், பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரம் கழித்து தான் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்தார். அப்போது தான் எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதை கூறினேன். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பிரியங்கா, அப்போது கண்ணீர் விட்டார் என்று கூறியுள்ளார்.