ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் ப்ரியா ராமன் – பிக் பாஸ் தான் காரணமா?
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் பிக் பாஸ் சீசன் 5 யில் கலந்து கொள்வதற்காக சீரியலில் இருந்து விலகினரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ப்ரியா ராமன் :
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ஆரம்பத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆதி – பார்வதியின் காதல் காட்சிகள் இளைஞர்கள் மனதை கவர்ந்தது. அதன் பிறகு சீரியலில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் வெளியேற தொடங்கினர். இந்த சீரியலின் நாயகன் ஆதிக்கு பதிலாக நிகழ்ச்சி தொகுப்பாளர் அக்னி நடித்தார் இவரது நடிப்பு அவ்வளவு வரவேற்பை பெறவில்லை. இதுவே நாடகத்தின் முக்கிய பின்னடைவுக்கு காரணமாக அமைந்தது.
செப்.14ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு வெளியீடு!
அதனை தொடர்ந்து முதன்மை கதாபாத்திரமான அகிலாண்டேஸ்வரி செம்பருத்தி சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது சீரியலின் கதையின்படி கொலை செய்ததற்காக சிறையில் உள்ளார் ஆரம்பத்தில் அகிலாண்டேஸ்வரி சிறையில் இருக்கும் காட்சிகள் அதிகம் ஒளிபரப்பானது. ஆனால் தற்போது 40 நாட்களுக்கு மேலாக பிரியா ராமன் காட்சிகள் சீரியலில் ஒளிபரப்பாகவில்லை. இதனால் இவர் செம்பருத்தி சீரியலில் இருந்து விலகி பிக்பாஸ் சீசன் 5க்கு சென்று விட்டாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
Reliance Jio Book விரைவில் அறிமுகம் – என்னென்ன வசதிகள்? எகிறும் எதிர்பார்ப்பு!
ஏற்கனவே ஜீ தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதே போல பிரியா ராமனும் பிக்பாஸுக்கு செல்வாரா என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.