இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாதல் – வெளியான பட்டியல்… நிதி ஆயோக் விளக்கம்!

0
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாதல் - வெளியான பட்டியல்... நிதி ஆயோக் விளக்கம்!
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாதல் - வெளியான பட்டியல்... நிதி ஆயோக் விளக்கம்!
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாதல் – வெளியான பட்டியல்… நிதி ஆயோக் விளக்கம்!

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இது குறித்து தற்போது நிதி ஆயோக் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.

வங்கி:

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் விரைவில் தனியார்மயமாக்கப்பட உள்ளதாக கடந்த 2 வருடங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது மத்திய அரசும் வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு வங்கி ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் கடந்த டிசம்பர் லோக்சபாவில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமயமாக்குவது குறித்து அந்தந்த துறையிடம் கருத்து கேட்டறியப்படும் என்றார்.

இதற்கு மத்தியில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் பட்டியல் வெளியிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த நிதி ஆயோக் போலியான பட்டியல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது போன்ற இந்த பட்டியலை நிதி ஆயோக் வெளியிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!