தமிழகம் முழுவதும் நவம்பர் 7 வேலை நிறுத்தம் – தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் தேவையான அத்தியாவசிய குடிநீர், தண்ணீர் லாரிகள் மூலம் நிரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து உள்ளனர்.
வேலை நிறுத்தம்:
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பல பகுதிகளில் தண்ணீர் குழாய்கள் இருந்தும் பல்வேறு கோளாறுகளால் தண்ணீர் வருவதே இல்லை. இத்தகைய நேரங்களில் மக்கள் தனியார் தண்ணீர் லாரிகளின் உதவியை நாடுகின்றனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் கார்ப்பரேஷன் தண்ணீர் முதல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வரை தனியார் லாரிகள் மூலமே விநியோகிக்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
தற்போது தனியார் தண்ணீர் லாரிகள் இல்லை என்றால் தினசரி குடிநீரை எங்கிருந்து பெறுவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
டெல்டா & ஓமிக்ரானின் கலவையால் உருவான புதிய ‘டெல்டாக்ரான்’ வைரஸ் – அச்சுறுத்தும் வைரஸின் தன்மை!
Follow our Instagram for more Latest Updates
அதாவது லாரிகளில் தண்ணீர் நிரப்ப உரிமம் மறுப்பது, லாரிகளை சிறைபிடிப்பது, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து நவம்பர் 7ம் தேதி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த முடிவு தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.