தமிழக ரயில்வே பயணிகள் கவனத்திற்கு – மதுரை டூ காசி இடையே தனியார் ரயில் இயக்க திட்டம்!

0
தமிழக ரயில்வே பயணிகள் கவனத்திற்கு - மதுரை டூ காசி இடையே தனியார் ரயில் இயக்க திட்டம்!
தமிழக ரயில்வே பயணிகள் கவனத்திற்கு - மதுரை டூ காசி இடையே தனியார் ரயில் இயக்க திட்டம்!
தமிழக ரயில்வே பயணிகள் கவனத்திற்கு – மதுரை டூ காசி இடையே தனியார் ரயில் இயக்க திட்டம்!

தமிழகத்தில் தேனி-போடி இடையே அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மதுரை-காசி இடையே பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் ரயில் இயக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

பயணிகள் கவனத்திற்கு

தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு மதுரை – போடி இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக மதுரை – தேனி இடையே 75 கி.மீ தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி முழுமையாக நடந்து முடிவடைந்துள்ளது. இதையடுத்து பல்வேறு சோதனை ஓட்டத்திற்கு பிறகு மதுரை – தேனி இடையிலான ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 26ம் தேதி பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேனி-போடி இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இப்பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி. மல்லையா பார்வையிட்டார். மேலும் மதுரை நிலையத்தில் நவீன பயணிகள் காத்திருப்பு அறை, ஒரு நிலையம்-ஒரு பொருள் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மதுரைக்கு புகழ்பெற்ற சுங்கடி சேலைகள் விற்பனை மையம் மற்றும் ரயில் நிலைய வெளி வளாக பகுதியில் மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் மேற்பார்வையிட்டார். மேலும் செய்தியாளர் சந்திப்பில் பி.ஜி. மல்லையா சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

தமிழக கோவில்களுக்கு செல்லும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடு – அரசின் தகவல்!

இவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தேனி-போடி அகல பாதை அமைக்கும் திட்டம் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைய உள்ளது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பாரத் கவுரவ் என்ற திட்டத்தின் கீழ் மதுரை-காசி இடையே தனியார் ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை மனு பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் ஆன்மீக சுற்றுலா பயணத்திற்காக இயக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். காரைக்குடி-திருவாரூர் இடையே கேட் கீப்பர் பணியிடத்தில் முன்னாள் ராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டு கூடுதலான ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!