தமிழகத்தில் நாளை (ஜூன் 23) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நிர்வாகம்!
ராமநாதபுரத்தில் நாளை (ஜூன் 23) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இது குறித்து அம்மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து கொரோனா ஊரடங்கால் வேலை இழந்தோர் மீண்டும் பணிக்கு செல்ல முயன்று வருகின்றனர். கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில்கள் முடங்கியதால் ஏராளமான மக்கள் வேலையிழந்து மிகவும் சிரமப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பாதிப்புகள் குறைந்த பிறகு அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்த நேரத்தில் வேலையிழந்தோர் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேட தொடங்கினர். வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதன் மூலம் வேலை வாய்ப்புகளை தேடி வந்தோர் மற்றும் படித்த ஏராளமான இளைஞர்கள் வேலை பயன் பெற்று வருகின்றனர். நாளை (ஜூன் 23) ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வழக்கமாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம் இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் ஏா்வாடியில் சந்தனக்கூடு விழா நடைபெறுவதால், உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
ICICI வங்கியின் FD வட்டி விகிதங்களில் உயர்வு – தகவல் வெளியீடு!
வாரந்தோறும் நடத்தப்பட்டு வரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு தோ்ச்சியடைந்தோா் முதல் பட்டதாரிகள் வரை கல்வித் தகுதிக்கு ஏற்ப தனியாா் துறையினா் தங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்து பணி நியமன ஆணைகளை வழங்கி வருகின்றனா். அந்த வகையில் நாளை நடைபெற உள்ள முகாமில் பங்கேற்க விரும்புவோா் தங்களது கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் பட்டினம் காத்தானில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.