தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி – தனியார் பள்ளிகள் முக்கிய கோரிக்கை!

0
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி - தனியார் பள்ளிகள் முக்கிய கோரிக்கை!
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி - தனியார் பள்ளிகள் முக்கிய கோரிக்கை!
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி – தனியார் பள்ளிகள் முக்கிய கோரிக்கை!

தமிழகத்தில் தற்போது பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் பள்ளிகளை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. அவ்வாறு பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது.

வார இறுதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து – மாநில அரசு அதிரடி நடவடிக்கை!

இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது பரவி வரும் ஓமைக்ரான் தொற்றை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு கொரோனா தொற்று அதிகரிப்பதால் முதலில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனால் 9 முதல் 12ம் வகுப்பு மாண்வர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டுள்ளதால் அவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் ஜன.31ம் தேதி வரை விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜன.24 முதல் பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு – மாநில அரசு அறிவிப்பு!

அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் மாணவர்களின் கற்றல் மீண்டும் பாதிக்கப்படுவதாக தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் கொரோனா தொற்று பரவல் குறையும் என்று மருத்துவ குழு தெரிவித்துள்ளது என்றும், மாணவர்களுக்கு முறையே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தனியார் பள்ளி நிர்வாக சங்கம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் விரைவில் மாணவர்களின் கற்றல் நலன் கருதி பள்ளிகள் திறக்குமாறு தனியார் பள்ளி நிர்வாக சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!