தமிழக மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்களை வழங்கும் தனியார் பள்ளிகள்? முழு விளக்கம்!
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு தேர்வுகளில் இந்த முறை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தான் தேர்ச்சி விகிதம் அதிகமாக பதிவாகி உள்ளது. மேலும் பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம் உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தனியார் பள்ளிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதி குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.
வழக்கு தள்ளுபடி:
தமிழகத்தில் பள்ளிகள் கடந்த இரண்டு வருடங்களில் திறக்கப்படவில்லை, இதனால் மாணவர்களின் கற்றல் முறையில் பெரிதும் இடைவெளி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதை சரி செய்யும் நோக்கில் பல மாநிலங்களில் கோடை விடுமுறை குறைக்கப்பட்டு 2022- 2023 ம் கல்வி ஆண்டு விரைவில் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கடந்த மே 13ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து கடந்த 13ம் தேதி 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் நேற்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மேலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.32 சதவீதம் பேரும், மாணவர்கள் 90.96 சதவீதம் பேரும் தேர்வாகி உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 85.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஜூன் 25ம் தேதி அன்று பொது விடுமுறை – அரசு முக்கிய உத்தரவு!
மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 31 ஆயிரத்து 034 பேர் எழுதவில்லை. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 42,519 பேர் எழுதவில்லை. மேலும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு தேர்வு அடுத்த மாதம் 25ந் தேதி நடைபெறும். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 2ந் தேதி முதல் மறு தேர்வு நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை தனியார் பள்ளிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது விதிகள் கொண்டு வரப்பட்ட 12 ஆண்டுகள் கழித்து தாமதமாக தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.