தமிழகத்தில் பெற்றோர்களை மிரட்டும் தனியார் பள்ளிகள்? பணம் கொடுத்தால் மட்டுமே டிசி!

0
தமிழகத்தில் பெற்றோர்களை மிரட்டும் தனியார் பள்ளிகள்? பணம் கொடுத்தால் மட்டுமே டிசி!
தமிழகத்தில் பெற்றோர்களை மிரட்டும் தனியார் பள்ளிகள்? பணம் கொடுத்தால் மட்டுமே டிசி!
தமிழகத்தில் பெற்றோர்களை மிரட்டும் தனியார் பள்ளிகள்? பணம் கொடுத்தால் மட்டுமே டிசி!

தனியார் பள்ளிகளில் இருந்து வேறு பள்ளிக்கு மாற வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டும் எனவும், தேர்ச்சி பெறவில்லை என மாற்று சான்றிதழில் போட்டு தரப்படும் எனவும் மிரட்டுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தனியார் பள்ளிகள்:

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்திற்க்கு பிறகு அனைத்து ஊழியர்களின் வருமானமும் குறைந்துவிட்டது. இதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் சேர்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். இத்துடன் பெரும்பாலான நடுத்தர மக்கள் வருமானத்தை ஓரளவுக்கு சரிப்படுத்த தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளி மற்றும் கட்டணம் குறைவாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தற்போது குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கும் பள்ளிகளில் சென்று மாற்று சான்றிதழை கேட்டால் நாளை நாளை என்று அலைக்கழிப்பதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Exams Daily Mobile App Download

மேலும், நடப்பு ஆண்டுக்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் எனவும், மூன்று மாதங்களுக்கு முன்பே குழந்தையை வேறு பள்ளிக்கு மாற்ற இருக்கும் விஷயத்தை பள்ளியில் தெரிவித்தால் மட்டுமே மாற்று சான்றிதழ்களை தருவோம் எனவும் பள்ளி நிர்வாகங்கள் கூறி வருவதால் பெற்றோர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சில பள்ளிகளில் மாற்று சான்றிதழை பெற வேண்டுமானால் குறிப்பிட்ட தொகையை செலுத்தி தான் பெற வேண்டும் என கூறி வருவதால் பெற்றோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பள்ளி குழந்தைகளுக்கு பரவும் புதிய வகை காய்ச்சல் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

மேலும், சில தனியார் பள்ளிகளில் மாற்று சான்றிதழை தரும்படி கேட்டால் தேர்ச்சி பெறவில்லை என பதிவிட்டு மாற்று சான்றிதழ்களை தருவோம் என மிரட்டுவதாக புகார் வந்தபடி இருக்கின்றன. அதையும் மீறி மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்து பெறப்படும் மாணவர்களின் மாற்று சான்றிதழில் மொழி, மதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மாற்றி தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. அரசு பள்ளிகளில் மாற்று சான்றிதழ் இல்லாமலேயே பிறப்பு சான்றிதழை வைத்து மட்டுமே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடைபெற வசதியிருக்கிறது. இதே வழிமுறையை தனியார் பள்ளிகளிலும் பின்பற்றினால் கட்டாயமாக இந்த பிரச்சனை இருக்காது என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றுச் சான்றிதழை தர மறுக்கும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!