தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணம் குறித்த உத்தரவு – நீதிமன்றம் கருத்து!

0
தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணம் குறித்த உத்தரவு - நீதிமன்றம் கருத்து!
தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணம் குறித்த உத்தரவு - நீதிமன்றம் கருத்து!
தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணம் குறித்த உத்தரவு – நீதிமன்றம் கருத்து!

நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பில் 50 சதவிகித மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவு குறித்து நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது

மருத்துவக் கல்லூரி கட்டணம்:

தற்போதுள்ள சூழ்நிலையில் பல மாணவர்களுக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. முன்னதாக பணம் இருந்தால் மட்டுமே மருத்துவர் ஆக முடியும் என்ற நிலை இருந்த நிலையில், தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவ படிப்புகள் படிக்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. ஆனால் அந்த வாய்ப்பு அனைத்து மாணவர்களும் கிடைப்பதில்லை. அதனால் பலர் தனியார் மருத்துவ கல்லூரிகளை நோக்கி செல்கின்றனர். ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அந்த வகையில் தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், மருத்துவ படிப்பில் மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப்பட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Exams Daily Mobile App Download

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அதில் நிகர் நிலை பல்கலைகழகங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகள் தரப்பில் அரசு கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலை கழகங்கள் வசூலிக்க வேண்டும் என கூறுவது சரி இல்லை என வாதிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில், இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தெரிவிக்கப்பட்டது.

சபரிமலை கோவில் செல்லுவோர் கவனத்திற்கு – மீண்டும் செப்.16ம் தேதி நடை திறப்பு!

மேலும் தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட உத்தரவை அமல்படுத்த நினைத்தால் அதற்காக தனியார் கல்லூரிகளுக்கு தனியாக மானியம் வழங்கலாம் என தெரிவித்தது. தேசிய மருத்துவ ஆணையமும் இது குறித்து சில வாதங்களை முன் வைத்தது. அதன் பின் பேசிய நீதிபதி தனியார் மருத்துவ கல்லூரிகளும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 50 சதவீத இடங்களுக்கான கட்டணம் நிர்ணயிப்பதற்கான விதிமுறைகளை வகுக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் 50 சதவிகித மாணவர்களுக்கு அரசு கல்லூரி கட்டணம் வசூலித்தால் மீதமுள்ள 50 சதவிகித மாணவர்கள் அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதனால் இந்த உத்தரவு குறித்து மறு ஆய்வு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மறு ஆய்வு செய்யும் வரை தற்போதைய நடைமுறையை பின்பற்றலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!