கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் பிப்ரவரி 22 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையமும், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது.
கல்வி தகுதி:
இதில் 8, 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள், டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் பங்கேற்கலாம். பல முன்னனி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் ஆட்கள் தேர்வு செய்கின்றன.
நடைபெறும் இடம்:
பிப்ரவரி 22 ஆம் தேதி நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் முகாம் நடைபெறுகிறது.
Tn
Nainar