தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு அறிவிப்பு எப்போது ?
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அரசு அறிவித்தது. ஆனால் 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
தனித்தேர்வர்கள்:
கடந்த கல்வி ஆண்டு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. மேலும் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே தேர்வுகளும் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்ததால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. ஆனால் தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதன் காரணமாக தற்போது தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் அவர்களுக்கான மதிப்பீடு விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தனர். தற்போது தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
ஆன்லைனில் சிபிஎஸ்சி தேர்வுகள் நடத்த வேண்டும் – தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை !
10ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு ரத்து என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு படிக்கும் தனித்தேர்வர்கள் குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆண்டு தோறும் சுமார் 10 ஆயிரம் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். தற்போது இதுகுறித்து தனித்தேர்வர்கள் சிலர் கூறுகையில், தேர்வுகள் நடத்தப்படுவதை முழுமையாக தெரிவித்தால் அதற்காக தயாராகுவதற்கு உதவிகரமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் உயர்கல்வி சேர்க்கை குறித்த முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று கூறி விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 தனித்தேர்வர்களுக்கு எக்ஸாம் பத்தி இன்னும் நிறைய விஷயம் கொடுத்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்..🙏