திருப்பூரில் ஜூன் 10ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – எழுத, படிக்க தெரிந்தால் போதும்!
திருப்பூரில் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 10ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இம்முகாம் மூலமாக தங்கள் நிறுவனத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ள தேவையான தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் அரசு சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஜூன் 10ம் தேதி திருப்பூரில் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN TRB தொடக்க கல்வித்துறையில் 9000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிக்கை வெளியீடு!
இதனை தொடர்ந்து இம்முகாம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருகிற ஜூன் 10ம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். அத்துடன் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள், தையல் தெரிந்தவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களின் சுயவிவரக்குறிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை உள்ளிட்டவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் இதில் பணி ஆணைகளை பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கும் விண்ணப்பம் செய்யலாம். இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பெற 0421-2999152, 94990-55944 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.