தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கான சூப்பர் அறிவிப்பு – ஏப்ரல் 24 ஆம் தேதி சிறப்பு முகாம்!
தமிழகத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களின் பொதுநலன் கருதி அவ்வப்போது தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து ஏப்ரல் 24 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் உள்ள படித்த வேலையற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பு துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழில்நெறி காட்டுதல் மையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவளின் காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எந்த மாவட்டத்திலும் நடத்தப்படவில்லை. இதனால் பல இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். அது மட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் தனியார் நிறுவனங்களுமே எந்த வேலைவாய்ப்பையும் புதிதாக அறிவிக்கவில்லை.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்திற்கு அனுமதி? வலுக்கும் கோரிக்கை!
இதனால் இளைஞர்களின் நலனுக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று வேலைவாய்ப்பு முகாமினை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமா, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தாலே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமில் கலந்து கொள்பவரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை – 32, கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.