தமிழகத்தில் நாளை (டிச.29) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 100+ நிறுவனங்கள் பங்கேற்பு!

0
தமிழகத்தில் நாளை (டிச.29) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 100+ நிறுவனங்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் நாளை (டிச.29) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 100+ நிறுவனங்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் நாளை (டிச.29) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 100+ நிறுவனங்கள் பங்கேற்பு!

நீலகிரி மாவட்டம் உதகையில் நாளை (29.12.2021) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் நாட்டை பொருளாதார வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க அரசு முன் வந்துள்ளது. அதனால் தளர்வுகளின் ஒரு பகுதியாக அரசு அனைத்து மாவட்டங்களிலும் தனியார் வேலைவாய்ப்புகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் அரசு தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் டிச.29, 30 ஆகிய தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (29.12.2021) நீலகிரி மாவட்டம் உதகையில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சேரிங்கிராஸ், கார்டன் சாலையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ஆணையர் முக்கிய உத்தரவு!

8 ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐடிஐ போன்ற கல்வித்தகுதிகள் பெற்றவர்கள் பங்கேற்கலாம். மேலும் ஓட்டுநர்கள், தையல் தெரிந்தவர்கள் போன்றவர்களும் பங்கேற்று வேலைவாய்ப்பை பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணையதள முகவரியில் முன்பதிவு செய்யலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0423 2444004, 9655394765 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இம்முகாமில் மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கிக் கடன் குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!