திருப்பூரில் நவம்பர் 30ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (நவ.30) அன்று தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதனால் இந்த முகாமில் வேலையில்லா பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல பேர் வேலையின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அதனால் தமிழக அரசு வேலையில்லா நிலையை போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மகளிர் திட்டம் ஆகியன இணைந்து நடத்துகிறது.
தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
இந்த மாபெரும் முகாம் தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமில் செவிலியர், ஐடிஐ முடித்தவர்கள், தொழில் பயிற்சி முடித்தவர்கள், பொறியியல் துறையில் பட்டம் வென்றவர்கள், கணினி ஆபரேட்டர்கள், ஓட்டுநர்கள், தையல் கலைஞர்கள் போன்ற அனைத்து விதமான தகுதியுடையவர்களும் பங்கு பெறலாம். மேலும் இந்த முகாமில் பங்கு பெற நினைக்கும் தனியார் நிறுவனங்கள் இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் Ph.D படிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு – ரூ.1 லட்சம் உதவித்தொகை! அரசு அதிரடி!
அத்துடன் இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவுகள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவுகள், மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இதே போல் மகளிர் திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்புகளுக்கான பதிவுகள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் குறித்த வழிகாட்டுதலுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 04212999152, 94990-55944 என்ற எண்களுக்கு தொடர்புகொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என்றும் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார்.