தமிழகத்தில் ஜூன் 8ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தற்போது வரும் ஜூன் 8ம் தேதி நடைபெற உள்ள வேலைவாய்ப்புப் முகாம் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி அலைந்து வருகின்றனர். இன்னும் அவர்களுக்கு ஏற்றவாறு வேலை கிடைக்கவில்லை என்று பலர் கூறுகின்றனர். தற்போது நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்து வருகிறது. இத்தகைய சூழலை மக்கள் சமாளிக்க வேலைவாய்ப்பு அவசிய ஒன்றாக உள்ளது. கொரோனா பரவலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் தனியார்துறை வேலைவாய்ப்புகள் நடைபெறும். இடையில் கொரோனா தாக்கத்தால் முகாம்கள் ரத்து செய்யப்பட்டது. பிறகு பாதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து அரசு அனுமதியுடன் வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது.
Indian Bank நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது | உடனே விரையுங்கள்!
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இந்த முகாம்கள் மூலம் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு கல்வித்தகுதி பெற்றவர்கள் வரை அனைவரும் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து வரும் ஜூலை 8ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அம்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் 2-வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் நெல்லை மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் ஜூலை 8ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் ஹரி பாஸ்கர் தெரிவித்து உள்ளார். மேலும் வேலை வாய்ப்புகளை தேடி வருபவர்கள் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.