தமிழகத்தில் 12 & 26 ஆகிய தேதிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் தகவல்!
தமிழகத்தில் வருகிற 12,26ம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வேலை இல்லாத படித்த இளைஞர்கள் பயன்பெறுமாறு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக நோயினை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி நாடு முழுவதும் பொதுமுடக்கம், ஊரடங்கு, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மேலும் பள்ளிகள், கல்லூரிகள் & தனியார் நிறுவனங்கள் போன்றவை செயல்பட தடை விதிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதன் காரணமாக நாட்டில் வேலையின்மை அதிகரிக்க தொடங்கியது. படித்த இளைஞர்கள் வேலையின்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது நாட்டில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. அனைத்து நிறுவனங்களும், தொழிற்சாலைகள் ஆகியவை வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன. மேலும் தனியார் நிறுவனங்களும் வேலைவாய்ப்பினை அதிகரித்து வருகின்றன. அதன்படி 12/8/2022 மற்றும் 26/8/2022 ஆகிய நாட்களில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இதில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர்.
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ இத படிங்க!
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8,10, 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு, ஐடிஐ டிப்ளமோ மற்றும் பிஇ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12ம் தேதி மற்றும் 26ம் தேதி ஆகிய வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ராணிப்பேட்டை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.