நாகர்கோவிலில் நாளை (டிச.31) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – முழு விபரம் இதோ!
தமிழகத்தில் தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்ட வாரியாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தனியார் துறை வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வாரிய அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் நாளை டிச.31ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபாஜ்இம்மானுவேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தடை, மீறினால் கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
குமாரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வி தகுதியுடையவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். இத்தகைய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தகுதியான ஊழியர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – A டூ Z தகவல்கள் இதோ!
அதனால் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாளை காலை 10 மணியளவில் நாகர்கோவில் கோணத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்திற்கு நேரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இம்முகாமில் பங்கேற்க விரும்பும் வேலை நாடுகள் மற்றும் வேலை அளிப்பவர்கள் அனைவரும் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.