தமிழகத்தில் டிச.4ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
கடலூர் மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதனால் இந்த முகாமில் வேலையில்லா பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பலர் வேலையின்றி மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அதனால் தமிழக அரசு வேலையில்லா நிலையை போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது கடலூர் மாவட்டத்தில் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி அன்று 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ளன.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை – அரசுக்கு கோரிக்கை!
இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமினை கடலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்த உள்ளன. இந்த மாபெரும் முகாம் திட்டக்குடி ஸ்ரீஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கடலூா் மாவட்டத்தைச் சாா்ந்த 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை கலந்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமில் செவிலியர், ஐடிஐ முடித்தவர்கள், தொழில் பயிற்சி முடித்தவர்கள், பொறியியல் துறையில் பட்டம் வென்றவர்கள், கணினி ஆபரேட்டர்கள், ஓட்டுநர்கள், தையல் கலைஞர்கள் போன்ற அனைத்து விதமான தகுதியுடையவர்களும் பங்கு பெறலாம்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் விளக்கம்!
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவர்கள் தமிழ்நாடு தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த முகாமில் வருகை தரும் அனைவரும் தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 04142-290039, 94990 55909 ஆகிய எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம். இதன் மூலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுக முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.