10,11,12ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் – ஜன.5 முதல் 7 வரை சிறப்பு கட்டணம்!!
தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு தேர்வை எழுத விரும்பும் தனித்தேவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க நாளையுடன் கால அவகாசம் முடிவடைகிறது. இந்த கால அவகாசத்திற்குள் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள்:
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10,11, 12ம் வகுப்பு பொது தேர்வுகளை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு இயக்க சேவை மையத்தின் வாயிலாக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து வருகின்றனர். அத்துடன் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேவர்கள் வருகிற ஜனவரி 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை.. கவலையில் இல்லத்தரசிகள் – இன்றைய நிலவரம் இதோ!
Follow our Twitter Page for More Latest News Updates
அதன்படி நாளையுடன் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைகிறது. மேலும் ஜனவரி 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்த தக்கல் முறையில் 10ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கூடுதல் கட்டணமும், இதே போல், 12ம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.1000 கூடுதல் கட்டணமாகவும் செலுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.
இவ்வாறு சிறப்பு கட்டணங்களை செலுத்தி ஜனவரி 5ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை பெற http://www.dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அல்லது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களையும் அணுகலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.