TNPSC தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை – தேர்வாணைய உறுப்பினர் தகவல்!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் அனைத்து வகையான தேர்வுகளிலும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தேர்வாணைய உறுப்பினர் ஆரோக்கியராஜ் தகவல் அளித்துள்ளார்.
TNPSC தேர்வு
தமிழக அரசு துறையில் காலியாக இருக்கும் அனைத்து பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி ஆட்சேர்ப்புகளை செய்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்த இருப்பதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்த ஆண்டு TNPSC தேர்வு முறைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முக்கியமானது என்னவென்றால் தமிழ் பாடத்தாளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே அடுத்த தாள்கள் திருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு TNPSC தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தேர்வாணைய உறுப்பினர் ஆரோக்கியராஜ் தகவல் அளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ‘தமிழகம் முழுவதும் இன்று TNPSC குரூப் 2 தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சுமார் 5,529 காலியிடங்களுக்கு 11,78 ,175 பேர் தேர்வுகளை எழுதுகின்றனர். இதில் அதிகபட்சமாக பெண் தேர்வர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே நேரத்தில் வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தேர்வுகளை எழுத அனுமதி இல்லை.
Post Officeல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாமல் வேலை – பெண்களுக்கான சூப்பர் அறிவிப்பு!
இப்போது, காலை 9 மணியளவில் துவங்கும் தேர்வுகளை எழுதுவதற்கு தேர்வர்கள் அனைவரும் 8.30 மணிக்கே மையங்களுக்கு வருகை தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குரூப் தேர்வு நடக்காத நிலையில் இந்த ஆண்டு தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மேலும் TNPSC தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் போன்ற குற்றங்களை தவிர்க்கும் விதமாக தொழில்நுட்ப வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.