விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் திடீர் நிறுத்தம் – இயக்குனர் உருக்கம்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் திடீர் நிறுத்தம் - இயக்குனர் உருக்கம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் திடீர் நிறுத்தம் - இயக்குனர் உருக்கம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் திடீர் நிறுத்தம் – இயக்குனர் உருக்கம்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் இருந்து வரவேற்புகளை பெற்றிருந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியல் திடீரென நிறுத்தப்பட்ட நிலையில், இது குறித்து இயக்குனர் வெளியிட்ட உருக்கமான பதிவு ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

வைதேகி காத்திருந்தாள்

இன்றைய கால கட்டத்தை சேர்ந்த மக்களின் ஒரு முக்கிய பொழுதுபோக்காக இருந்து வருவது டிவி சீரியல்கள் தான். ஏனென்றால் டிவி சேனல்களில் ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரையும் இடைவிடாமல் ஒளிபரப்பாகி வருவதால், சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இதில் குறிப்பாக பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்போதும் TRP ரேட்டிங்கில் முதன்மையான இடத்தை பெறுவது உண்டு.

ராமமூர்த்தியை பார்க்க வந்த ராஜேஷ், விவாகரத்து பத்திரம் பற்றி கேட்ட ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இப்படி இருக்க டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருந்த சீரியல், ‘வைதேகி காத்திருந்தாள்’. இத்தொடர் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் நடிகர் ப்ரஜன் மற்றும் சரண்யா இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தனர். இந்நிலையில் சினிமா பட வாய்ப்புகள் காரணமாக நடிகர் ப்ரஜன் இந்த சீரியலை விட்டு திடீரென விலகுவதாக அறிவித்தார். இதனால், நடிகர் ப்ரஜன் நடித்து வந்த விஜய் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் ‘ராஜ பார்வை’ சீரியல் நடிகர் முன்னா களமிறக்கப்பட்டார்.

ஜீ தமிழ் சீரியலில் டீச்சராக களமிறங்கும் “பாரதி கண்ணம்மா” அஞ்சலி – ப்ரோமோ ரிலீஸ்!

அந்த வகையில் ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியலில் நடிகர் முன்னா நடித்திருந்த சில எபிசோடுகள் மட்டும் வெளியான நிலையில் திடீரென இந்த சீரியல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி வரலாற்றில் வெறும் 37 எபிசோடுடன் முடிவடைந்த ஒரு சீரியலாக மாறி இருக்கிறது ‘வைதேகி காத்திருந்தாள்’. இப்போது இந்த சீரியலின் திடீர் நிறுத்தம் குறித்து நடிகை சரண்யா ஒரு முக்கியமான பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இவரை தொடர்ந்து ‘வைதேகி காத்திருந்தாள்’ சீரியலின் இயக்குனரும் ஒரு உருக்கமான பதிவை வெளியிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. அதாவது, ‘என் வாழ்க்கை பயணத்தில் உள்ள ஒரு ஸ்வாரசியமான விஷயமே திருப்பங்கள் நிறைந்தது தான். அதனால் இன்னும் அதிக பாசிட்டிவிட்டி உடன் அடுத்த ஸ்வாரசியத்தை நோக்கி பயணிக்கிறேன். இது எனது பயணத்தில் அதிக ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. இந்த பயணத்தில் என்னுடன் இருக்கும் அனைவருக்கும் நன்றிகள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!