தமிழகத்திற்கு பாரத பிரதமர் மோடி நவ.11ல் வருகை – பாதுகாப்பு பணிகள் தீவிரம்!!
திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற நவம்பர் 11ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு பாரத பிரதமர் வருகை புரிய இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமர் வருகை
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் 35-வது பட்டமளிப்பு விழாவானது கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. அதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக அடுத்த பட்டமளிப்பு விழாவானது நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இப்பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவானது வருகிற நவம்பர் 11ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் தற்போது இப்பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டு வருக்கின்றனர். மேலும் இவர்கள் காந்தி கிராம சுகாதார மற்றும் குடும்ப நல அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளம், பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்து கொள்முதல் – சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்து!
Follow our Instagram for more Latest Updates
இதே போல் ஹெலிகாப்டர் தளத்தை சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து கார் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெறும் பகுதிக்கு பிரதமர் வருவார் என்பதால் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.