செப்.24 ல் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் சந்திப்பு – முக்கிய ஆலோசனைகள்!
செப்டம்பர் 25ம் தேதி அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்காக செப்டம்பர் 22ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
அமெரிக்க பயணம்:
ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா சபை என்பது, பல நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்புஆகும். கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றது.இச்சபையின் கொள்கைகளுக்கு ஒத்துக் கொண்ட நாடுகள் உறுப்பினராக தேர்வு செய்யப்படும். பன்னாட்டுச் சட்டங்களின்படி நாடுகளுக்கிடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து உலக அமைதியை ஏற்படுத்துதல். மனிதனின் உரிமைகளையும் அடிப்படை சுதந்திரங்களையும் காத்து, இன மொழி அல்லது சமய வேறுபாடுகளை நீக்கிப் பன்னாடுகளின் சமுதாய பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் போன்ற நோக்கங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
செப்.21 காலை 6 மணி முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
செப்டம்பர் 25ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் நகரில் நடக்கும் ஐ.நா., பொதுச் சபை கூட்டதில் உலகத் தலைவர்கள் நேரில் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி பொதுச்சபை கூட்டத்தில் உரை ஆற்ற உள்ளார். இதற்காக செப்டம்பர் 22ம் தேதி அன்று இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். மேலும், ‘குவாட்’ மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து ‘குவாட்’ அமைப்பை உருவாக்கியுள்ளன.இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில் 24ம் தேதி நடக்க உள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், 23ம் தேதி அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும் மோடி சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து 24ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச இருக்கிறார். கொரோனா பரவல் அச்சம் காரணமாக காணொளி வாயிலாக நடைபெற்று வந்த உலக தலைவர்கள் கூட்டம் மீண்டும் நேரடியாக நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.