இன்று தேசிய மருத்துவர்கள் தினம் – பிரதமர் மோடி உரை!
தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 3 மணிக்கு இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மருத்துவர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
தேசிய மருத்துவர்கள் தினம்:
1991-ம் ஆண்டு முதல் டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவைப் போற்றும் வகையில் இந்தியாவில் ‘தேசிய மருத்துவர் தினம்’ ஜூலை 1 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிறந்த மருத்துவராகவும், விடுதலை இயக்க போராளியாகவும் புகழ் பெற்றவராக இவர் திகழ்ந்தார். இவர் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டாவது முதலமைச்சராக பணியாற்றியவர்.
தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தன்னலமற்று செயலாற்றி வரும் மருத்துவர்களின் சேவையை பலரும் பாராட்டி வரும் நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர்கள் தினம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “மருத்துவர்கள் தினத்தன்று அனைத்து மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள், மருத்துவ உலகில் இந்தியாவின் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை. மேலும் நமது உலகத்தை பாதுகாக்க மருத்துவர்கள் பங்கு அதிகமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று “மனதின் குரல்” என்ற நிகழ்ச்சியில் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை குறித்து தான் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இன்று தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி மருத்துவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.