பிரதமர் மோடியின் Rozgar Mela திட்டம்.. 10 லட்சம் வேலைவாய்ப்பு – இன்று தொடங்கி வைப்பு!
பிரதமர் நரேந்திர மோடி Rozgar Mela என்ற திட்டத்தை இன்று துவங்கி வைக்க உள்ளார். இது குறித்த முழு விரிவாரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Rozgar Mela:
தற்போதைய காலத்தில் வேலைவாய்ப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. ஆனால் ஆண்டு தோறும் கல்லூரி படிப்பை முடித்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதனால் வேலைப்பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பு முகாம் அமைத்தல் போன்ற பணிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் பலர் தனியார் நிறுவனத்தில் வேலை பெறுகின்றனர்.
UPSC வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து தகவல்களுடன்…!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி Rozgar Mela என்ற ஒன்றை இன்று துவங்கி வைக்க உள்ளார். இதன் மூலம் பல்வேறு துறைகளில் 10 லட்சம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது இன்று காலை 11 மணியளவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. video conferencing மூலம் தொடங்கப்படும் இந்த திட்டத்தில் 75,000 விண்ணப்பதாரர்களுக்கு நியமனக் கடிதம் (Appointment letters) வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் வேலையின்மை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.