மாதம் ரூ.50,000 வழங்கும் பிரதமர் மோடியின் திட்டம் – இளம் படைப்பாளிகளுக்கு வாய்ப்பு!
நாடு முழுவதும் உள்ள 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ 50,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 75 இளம் எழுத்தாளர்கள் இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் திட்டம்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பல்வேறு மாநில அரசுகள் மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்துள்ளன. மத்திய அரசும் தீபாவளி வரை ரேஷனில் இலவச தானியங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டம் – வழிகாட்டுதல் குழு அமைப்பு!!
இந்த நலத்திட்டம் மூலமாக நவம்பர் மாதம் வரை 80 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் ரூ 50,000 வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இளம் படைப்பாளிகள் இந்தியா மற்றும் அதன் பண்பாட்டை உலக அளவில் அறியும்படி இலக்கியப் படைப்புகளாக மாற்றுவதற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரதேகமாக உருவாக்கப்பட்ட இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து நாடு முழுவதும் உள்ள இளம் படைப்பாளிகள் 75 பேர் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படுவோருக்கு 6 மாத காலத்திற்கு மாதம் தோறும் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்த இளம் படைப்பாளிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த போட்டி ஜூன் 4 முதல் ஜூலை 31 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு விண்ணப்பிக்க வழிகாட்டல் திட்டத்தின் கீழ் 5,000 சொற்கள் அடங்கிய புத்தகம் உருவாக்க வேண்டும்.