பிரதமரின் தொழிலாளர் விருது – தமிழகத்தில் 6 பேர் தேர்வு! ரூ.1 லட்சம் பரிசுத்தொகை!
இந்தியாவில் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் தொழிலாளர் விருது வழங்கபடுகிறது. அதில் திருச்சிராப்பள்ளி பெல் நிறுவனத்தில் பணிபுரியும் 8 தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பரிசுத்தொகையாக 1 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொழிலாளர் விருது :
இந்தியாவில் தொழிலார்களை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் பிரதமரின் தொழிலாளர் விருது வழங்கப்படுகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் தொழிலார்களின் திறமை,பணி செய்வதில் தனித்துவம், கடமை உணர்வு ,புத்திக்கூர்மை மற்றும் துணிச்சலுடன் பணியாற்றும் திறமை ஆகியவற்றில் மதிப்பிட்டு தகுதி வாய்ந்த சிறந்த தொழிலாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் மூலம் மற்ற தொழிலாளர்களும் ஊக்கம் பெற்று தொடர்ந்து பணி செய்யும் மன நிலையை அடைகின்றனர்.
TN Budget 2021 Live Updates – தமிழக அரசின் இ-பட்ஜெட் தாக்கல்!
தற்போது 2018 ம் ஆண்டிற்கான பிரதமரின் தொழிலாளர் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த நிறுவனங்களில் இருந்து மொத்தம் 69 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 49 பேர் பொதுத் துறை நிறுவனங்களையும், மீதமுள்ள 20 பேர் தனியார் துறையையும் சேர்ந்தவர்கள் ஆவார். ஷ்ரம் வீர் விருதுக்கு 60,000 ரூபாய் பரிசு தொகையும், ஷ்ரம் ஸ்ரீ விருதுக்கு 40,000 பரிசு தொகையும், ஷ்ரம் பூஷன் விருது பெறுபவர்களுக்கு 1,00000 பரிசு தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதில் தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் திருச்சிராப்பள்ளி பெல் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எம் பாலமுருகன் (கைவினைஞர்-II) மற்றும் எம் குருநாதன் (துணைப் பொறியாளர்) ஆகியோருக்கு ஷ்ரம் பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுசூதன் (பணியாளர்), எம் செந்தில்குமார் கைவினைஞர்-II, கே பாலமுருகன் (கைவினைஞர்-II மற்றும் முங்கரா தன ராஜூக்கு கைவினைஞர் ஷ்ரம் வீர்/ வீரங்கனா விருது வழங்கப்படவுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.