சமூக வலைதள பயன்பாடு குறித்து பிரதமர் எச்சரிக்கை – மக்களுக்கு வேண்டுகோள்!
பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொண்ட காணொளி கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டது. அதிலும், மக்களுக்கு சமூக வலைதள பயன்பாடு குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
செய்திகள் பகிர்வு:
இணையத்தின் மூலம் பல்வேறு நன்மைகள் இருந்த போதிலும், அதிக அளவிலான தீமைகளும் உள்ளது. ஒரு நல்ல விஷயத்தை பகிரும் போது ஏற்படும் பாதிப்பை விட, போலியான செய்திகள் அதிக அளவில் பரவி விடுகிறது. இது மக்கள் மத்தியில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில், இன்று உள்துறை அமைச்சர்களுக்கான மாநாடு நடந்தது.
இனி GMail Storage பற்றிய கவலையே இல்ல – பயனர்களுக்கு புதிய வசதியை உருவாக்கிய Google!
Exams Daily Mobile App Download
அதில், பல முக்கிய விஷயங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், புதிய திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பிரதமர் இந்த மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது, ஒரே நாடு ஒரே சீருடை திட்டம் குறித்தும் பிரதமர் அறிவித்தார். குறிப்பாக, மக்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தியை பகிரும் போது 10 முறை நன்றாக ஆராய்ந்து தான் அந்த செய்தியை பகிர வேண்டும் என்று கூறியுள்ளார். போலியான தகவல்கள் மூலம் அதிக மோசமான விளைவுகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டு விடும், அதிநவீன வசதிகளை பயன்படுத்தும் அதே வேளையில், சிந்தித்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.