பூசாரிகளுக்கு பணி நிரந்தரத்துடன் மாத ஊதியம் வழங்க வேண்டும் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள கோவில்களில் பணியாற்றும் பூசாரிகளுக்கு பணி நிரந்தரம் செய்வதுடன் அவர்களுக்கு மாத ஊதியமும் வழங்க வேண்டும் என்று பூசாரிகள் நல சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசுக்கு கோரிக்கை:
தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் இனி தமிழில் தான் அர்ச்சனை செய்யப்படும் என்று அரசு கடந்த மாதம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. மேலும், இதற்கான பயிற்சி மையங்களும் தமிழகத்தில் தொடங்கப்பட்டு அதற்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்நிலையில், தமிழ்நாடு பூசாரிகள் நலச்சங்க மாநிலத் தலைவர் வாசு அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி – அமைச்சர் தகவல்!
அறிக்கையில் அவர், தமிழகத்தில் மொத்தம் 14,000 க்கும் மேற்பட்ட கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ளது. இந்த கோவில்களில் உள்ள பூசாரிகளுக்கு அரசு சார்பில் ஊதியம் ஏதும் வழங்கப்படுவதில்லை. இங்கு பணியில் இருக்கும் பூசாரிகள் அனைவரும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையை மட்டுமே நம்பி உள்ளனர். கொரோனா காலத்தில் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பலமுறை அரசிடம் மாத ஊதியம் கோரி இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
எனவே, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல், அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கவும் அரசு உத்தரவிட வேண்டும் என்று மாநிலத் தலைவர் அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.