பட்ஜெட்டுக்கு பிறகு இந்த பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு – முழு விவரம் உள்ளே!!
2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி அன்று தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் 35 வகையான பொருட்களின் இறக்குமதி மீதான வரி அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
விலை உயர்வு
2023-24 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவைகளில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
JEE தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விதிமுறைகளை தளர்த்த அரசு முடிவு? வெளியான முக்கிய தகவல்!
மேலும் இந்த பட்ஜெட்டில் 35க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி மீதான வரி அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இது தொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள் ஆலோசனை மேற்கொண்டு இறக்குமதி வரி உயர்த்தப்பட வேண்டிய பொருட்களின் பட்டியலை அரசாங்கம் தயாரித்துள்ளது. அதன்படி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த பட்டியலில் இருக்கும் பொருட்களின் விலை உயரும் என கூறப்படுகிறது.
இந்த பட்டியலில், விலையுயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், நகைகள், தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், High Class Paper மற்றும் வைட்டமின்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. இந்த இறக்குமதி வரியை உயர்த்துவதன் மூலமாக இந்த பொருட்களின் இறக்குமதியை குறைக்கவும், உற்பத்தியை அதிகப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.