குடிமகன்களுக்கு நல்ல செய்தி : இனி டாஸ்மாக் கடைகளில் விலைப்பட்டியல் – அமைச்சர் உத்தரவு!!
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் உள்ள சில்லறை கடைகளில் மதுபானங்களின் விலையை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான கடைகள்:
தமிழகம் முழுவதும் மொத்தம் 5,300 மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் (டாஸ்மாக்) நடத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை விட மதுபான விற்பனை கடைகள் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவிழா, பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மது விற்பனை சினிமா படங்களின் வசூலையும் விஞ்சி சாதனை படைப்பது உண்டு. அரசிற்கு மதுபான கடைகள் மூலமாவே பெரும்பான்மையான வருவாய் கிடைக்கிறது.
சென்னை அமேசான் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மதுபான கடைகளில் கூடுதல் விலையில் மதுபானம் விற்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ வளாகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக் மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தினை தவிர கூடுதல் நேரத்தில் மதுக்கடைகள் திறந்து வைக்க கூடாது.
OLA நிறுவனத்தில் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு – CEO அறிவிப்பு!
கூடுதல் விலைக்கு மது விற்றால் அவர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளோம். அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் மது கடைகளில் விலை பட்டியல் வைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். அதன் படி நேற்று மதுக்கடைகளில் அனைத்து மது வகைகளின் விலை விபரங்கள் அடங்கிய பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதில் இருப்பதை விட கூடுதல் விலை வசூலித்தால், புகார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.