தமிழகத்தில் கிருமிநாசினி, மாஸ்க் உட்பட 15 பொருட்களுக்கு விலை உச்ச வரம்பு – அரசு நிர்ணயம்!
தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக கொரோனா பேரிடர் காலத்தில் அதிகம் தேவைப்படும் கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் என்று அறிவித்து அதற்கான விலை உச்ச வரம்பினையும் நிர்ணயம் செய்துள்ளது.
தமிழக அரசு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் மக்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா நோய்த்தொற்று இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் முதல் இரண்டாம் அலையாக உருவெடுத்து பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதம் தற்போது மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு மக்களை காக்கும் வகையில் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆன்லைனில் ஆதார், பான் கார்டு இணைக்கும் வழிமுறைகள் – கடைசி தேதி குறித்த விவரங்கள்!
மேலும் மக்கள் அனைவரையும் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்ற பல பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தேவைப்பட்டால் மக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து இக்காலகட்டத்தில் மாஸ்க், கிருமிநாசினி போன்ற பொருட்களின் விலை கடும் உச்சம் அடைந்து வருகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மக்களை காக்கும் பொருட்டு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி கொரோனா பேரிடர் காலத்தில் அதிகமாக பயன்படும் முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட 15 பொருட்களை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்தது. மேலும் அதற்கான விலை உச்ச வரம்பையும் தமிழக அரசு தற்போது நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி N-95 முகக்கவசம் ரூ.22 க்கு மேல் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.