தாய்மொழியில் கல்வி கற்பதே சிறந்தது – குடியரசுத் தலைவர் அறிவுறுத்தல்!
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜெயதேவ் பவனில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். இதில் இவர் தாய்மொழி கல்வியே மாணவர்கள் கற்க வேண்டும். தாய்மொழி கல்வியின் சிறப்புகள் குறித்தும் பேசியுள்ளார்.
தாய்மொழி கல்வி
இந்தியாவில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைத்திட வேண்டும் என மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜெயதேவ் பவனில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. இதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். இதில் இவர் கூறியிருப்பதாவது, நாட்டில் இருக்கும் ஏழை எளிய மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைத்திட மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் கல்வி அனைத்து விதமான மாணவர்களுக்கும் சமமாக கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தொழில்நுட்பக் கல்வியை ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள ஏராளமான மாணவர்கள் சிரமப்பட்டு வருவதாகவும் இதற்காக தேசியக் கல்விக் கொள்கையில் தொழில்நுட்பக் கல்வியை மாநில மொழிகளில் வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஆய்வு நடத்த அரசு உத்தரவு!
Follow our Instagram for more Latest Updates
மேலும் தாய்மொழி கல்வி தொடர்பாக இவர் தெரிவித்துள்ளதாவது, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தாய்மொழி உதவுவதாகவும் அதனால் பள்ளி மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் தாய்மொழிக் கல்வியினால் நகரம் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சமமான வாய்ப்புகளை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மாநில மொழிகளில் தற்போது பாடநூல்கள் கிடைப்பதால் தொழில்நுட்பக் கல்வியை கற்பிக்க சிரமங்கள் ஏற்படுவதில்லை எனவும் அதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிங்கை சாரும் என்றும் கூறியுள்ளார்.