மதுரைக்கு வரும் இந்திய ஜனாதிபதி – பாதுகாப்பு பணிகள் தீவிரம்

0

மதுரைக்கு வரும் இந்திய ஜனாதிபதி – பாதுகாப்பு பணிகள் தீவிரம்

வரும் 18ம் தேதி மகா சிவராத்திரி பண்டிகையையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுரை வருகிறார்.

மகா சிவராத்திரி:

தமிழகத்தில் வரும் 18ம் தேதி மகா சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அத்தினத்தன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை ஈசா மையத்திற்கு சென்று வழிபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரை விமானநிலையம் வருகிறார். அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றபின் மதுரைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ரத்து – மத்திய அமைச்சர் தகவல்!!

மதுரையை வந்தடைந்ததும் மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின் பிற்பகல் மதுரை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்று ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறார். எனவே ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுரை வருவதை ஒட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!