PMRBP 2023 விருதுக்கு 11 மாணவர்கள் தேர்வு – நாளை குடியரசு தலைவர் வழங்கல்!!
நாட்டில் சமூக சேவை, புத்தாக்கம், விளையாட்டு, கல்வி, கலாச்சாரம், கலை, வீரம் உள்ளிட்ட துறைகளின் கீழ் சிறப்பாக சாதனை புரிந்த சிறார்களுக்கு பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான இவ்விருதை குடியரசு தலைவர் வழங்க உள்ளார்.
PMRBP விருது
நாட்டில் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் கலை, விளையாட்டு, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்க பல்வேறு வகையான நலத்திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமூக சேவை, புத்தாக்கம், விளையாட்டு, கல்வி, கலாச்சாரம், கலை, வீரம் உள்ளிட்ட துறைகளின் கீழ் சாதனை புரிந்த சிறார்களை பெருமைப்படுத்தும் விதமாக பிரதம மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 18 வயதுடைய மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான இவ்விருதை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 மாணவர்கள் பெற உள்ளனர். அதன்படி இவ்விருதை 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 6 மாணவர்களும் மற்றும் 5 மாணவிகளும் பெற உள்ளனர்.
கல்லூரி & பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பரான திட்டம் – UGC பரிந்துரை!!
PMRBP விருது பெறும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் பதக்கம், மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, அத்துடன் சான்றிதழும் வழங்கப்படும். இவ்விருதை நாளை (ஜனவரி 23) குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்க உள்ளார்.