தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமெடுத்து வருவதால் இதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கடந்த 2021, 2022 ம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று கோரத்தாண்டவம் ஆடியது. இதனை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு அதனை மக்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2021 ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி பயன்பட்டால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. அதனால் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
இதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் மீண்டும் தடுப்பு பணியாக ஊரடங்கு விதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதில் சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக இருந்த நிலையில் தற்போது 100 ஐ எட்டியுள்ளது. மேலும் இந்த பாதிப்பு எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் அடுத்த 2 வாரத்திற்கு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, முக கவசம் அணிதல் போன்ற நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.