தமிழகத்தில் வெள்ளம் ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை – அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் வெள்ளம் ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் வெள்ளம் ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை - அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் வெள்ளம் ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியதை பற்றி பார்ப்போம்.

வெள்ளப்பெருக்கு அபாயம்

தமிழகத்தில் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. அத்துடன் தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளது. அதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்களில் கனமழை காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் அங்குள்ள 150 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளது. அதனால் நீலகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இன்று மாலைக்குள் மரங்கள் நீக்கப்பட்டு மின் விநியோகிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் மின் உற்பத்தி குறைந்துள்ளது. ஆனாலும் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களின் IAS அதிகாரிகள் திடீர் இடமாற்றம் – முக்கிய அறிவிப்பு!

இதற்கு முதற்கட்டமாக அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இதே போல் காவிரி கரையோர பகுதிகளில் ஏற்பட்ட நீர் தேக்கம் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள பகுதிகளில் நீர் வடிந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படும் என்று கூறியுள்ளார். மேலும் காவிரி கரையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் மின்சார வாகனங்களுக்கு ஜார்ச்சர் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!