ரயில் பயணங்களுக்கான முன்பதிவு கட்டாயம்? தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ரயில் பயணங்களுக்கு முன்பதிவு செயல்முறை கட்டாயப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நடைமுறை தற்போது நீக்கப்படுவதாக இந்தியன் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில் முன்பதிவு
நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக நிலவிக் கொண்டிருக்கும் கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் குறிப்பிட்ட சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் கடந்த ஒரு சில மாதங்களாக வழக்கம் போல செயல்பட துவங்கி இருக்கிறது. இருப்பினும் இன்னும் முழுமையான அளவுக்கு ரயில்கள் சரியாக இயக்கப்படவில்லை. இதற்கிடையில் கொரோனா நோய்த்தொற்று பரவலின் போது ரயிலில் பயணம் செய்பவர்கள் அனைவரும் கட்டாயமாக முன்பதிவுகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஜூலை 15ல் ஆலோசனை – இதற்காக தான்!
இந்த செயல்முறை இன்று வரைக்கும் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் பொது கம்பார்ட்மெண்டில் பயணிக்கும் பயணிகளுக்கு முன்பதிவு தேவையில்லை என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில், பொதுப்பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முன்பதிவு அவசியம் இல்லை என்று கிழக்கு மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மேலும், முன்பை போல பொது கம்பார்ட்மெண்டில் பயணிப்பவர்கள் டிக்கெட் கவுண்டரில் இருந்து டிக்கெட்டுகளை பெற்று பயணிக்கலாம் என்று மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வீரேந்திர குமார் கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதாவது, சாதாரண மக்கள் ரயில் பயணங்களின் போது சந்திக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள பொது கம்பார்ட்மெண்டில் முன்பதிவு இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர உள்ளூர் ரயில்களில் பயணம் மேற்கொள்பவர்கள் இனி சிறப்புக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.